News April 15, 2025
தென்காசி: வேலைதேடும் இளைஞரா நீங்கள் ?

தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் <
Similar News
News April 16, 2025
குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த வல்லம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை என தெரியவந்துள்ள நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News April 15, 2025
தென்காசி:பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க.
News April 15, 2025
காதலித்து விட்டு மறுப்பு சொன்ன காதலியை வெட்டிய காதலன் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருளியுள்ள கற்குடிபகுதி சேர்ந்த திருமலை குமார் தெற்கு மேட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென காதலி உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காதலன் திருமலை குமார் காதலியை வீடு தேடி சென்று அறிவாளால் வெட்டினார். அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.