News March 23, 2024
தென்காசி விடுதலை சிறுத்தைகள் ஆலோசனை

தென்காசியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸை கடையம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மற்றும் ஒன்றிய மாணவரணி நிர்வாகி கார்த்திக் நாடார், ஆழ்வை நகரச் செயலாளர் தங்கராஜா, தென்காசி ரீகன் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை செய்தனர்.
Similar News
News September 6, 2025
ஆலங்குளத்தில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டவர் கைது

ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் அழகாபுரியை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (25)இவர் வீட்டில் கலர் பிரிண்டிங் இயந்திரத்தில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
News September 5, 2025
சங்கரன்கோவிலில் வாகனம் ஏலம் அறிவிப்பு

சங்கரன்கோவில் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 89 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 01 நான்கு சக்கர மோட்டார் வாகனம் என மொத்தம் 90 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.09.2025 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பனவடலிசத்திரம் காவல் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க
News September 5, 2025
BREAKING: தென்காசி கோவில் தலைமை அர்ச்சகர் பணிநீக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் கோவிலில் இருந்த விலை உயர்ந்த வெள்ளி விளக்குகள், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவில் நிர்வாக அதிகாரி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.