News December 28, 2025
தென்காசி: வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்க அழைப்பு

வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்களை https://www..eci.gov.in/electors மற்றும் https://voters.eci.gov.in/ Voter Helpline App ECI NET App சமர்ப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.
Similar News
News December 28, 2025
JUSTIN: தென்காசியில் பால் விலை உயர்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொதுமக்கள், பால் விற்பனையாளர்கள் கவனத்திற்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஜனவரி 1ம் தேதி (01.01.2026) முதல் பால் கொள்முதல் விலையை விட ஓன்றுக்கு 40 ரூபாயாக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.
News December 28, 2025
தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க..
News December 28, 2025
தென்காசி: காவலர் தற்கொலை!

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தர்(31). இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றினார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லைய அரசு மருத்துவமனை அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


