News September 30, 2025
தென்காசி: ரோட்டில் அடிபட்டு கிடந்த மான்

தென்காசி, சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட நிலையில் கிடந்த மானை அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் அடிபட்டு கிடந்த மானிற்கு முதலுதவி அளித்து அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.
Similar News
News March 7, 2026
தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த பெண்கள்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நேற்று மதியம் தனியார் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை நோக்கி புறப்பட்டார். அப்போது, அவரது காரை மறித்த மகளிர் அவருடன் செல்பி எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மகளிர் அலைபேசியை வாங்கிய துணை முதல்வர் செல்ஃபி எடுத்த பின் அவரிடம் மீண்டும் அலைபேசியை வழங்கினார்.
News March 6, 2026
தென்காசி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 6, 2026
தென்காசி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


