News September 1, 2025
தென்காசி: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் RAILWAY வேலை!

தென்காசி இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இங்கே <
Similar News
News September 1, 2025
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி கலந்து கொண்டனர்.
News September 1, 2025
தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..
News September 1, 2025
சொக்கம்பட்டியில் பிரதமரின் மான் கி பாத் நிகழ்வு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 146 பூத்தில் நேற்று (ஆக 31) பா.ஜ.க தென்காசி கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் “மனதின் குரல்” #mannkibaat2025 நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கண்டுகளித்தனர். 125-வது #MannKiBaat ல் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்வுகளை பற்றி உரையாற்றினார்.