News September 27, 2025

தென்காசி: முக்கிய ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலங்களில் செப்-30ம் தேதி பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – ஈரோடு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 16846) செங்கோட்டையில் இருந்து காலை 5:10 புறப்பட்டு கரூர் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு வரை சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News September 27, 2025

தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

News September 27, 2025

தென்காசி: உங்க மொபைல் தொலைந்துவிட்டதா..இதோ தீர்வு

image

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 27, 2025

தென்காசி: பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை

image

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த திருமலையாச்சி (75) என்பவர் சுரண்டையிலிருந்து சேர்ந்தமரம் செல்ல அரசுப் பேருந்தில் பயணித்தார். சுரண்டை அருகே ஆலடிப்பட்டி விலக்குப் பகுதியில் பேருந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுரண்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!