News January 31, 2026

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் வசந்த் (30). சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு எதிர்பாராத விதமாக அவர் வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

தென்காசி : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

தென்காசி மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இங்கு <>கிளிக் <<>>செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த மாதம் பருப்பு , எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை
SHARE பண்ணுங்க.

News February 4, 2026

தென்காசி: பாலியல் வழக்கில் பள்ளி தாளாளர் கைது

image

தென்காசி, பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளர் செல்வசௌந்தர பாண்டியன் மீது, பாலியல் புகார் தெரிவித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் பள்ளி நிர்வாகியை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்.

News February 4, 2026

தென்காசி மாவட்டத்தில் 499 பேர் கைது!

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்ஙன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 488 பெண்கள் உட்பட 499 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!