News December 7, 2025
தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கடையம் அருகே காசிவிஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவர் நேற்று தனது வீட்டு மாடுகளை கட்டிவிட்டு வருகையில் கால் வழுக்கி அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்த காரணத்தால் மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை G.H-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இசக்கிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News March 4, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டம் (தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம் கொடுக்கபட்டுள்ளது.
News March 3, 2026
தென்காசி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
தென்காசி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.


