News December 31, 2024
தென்காசி மாவட்ட காவல்துறையின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் ஒரு சில அறிவுரைகளையும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்
Similar News
News September 19, 2025
தென்காசி: பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் அறிவிப்பு

சங்கரன்கோவில் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகம் கட்டண கழிப்பிடம் மற்றும் வெளிப்புற ஏழு கடைகள் சிறப்பு நிபந்தனைக்கு உட்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளியை 1.10.2025 ஆம் தேதி புதன்கிழமை காலை 10:30 மணி வரை சமர்ப்பிக்கலாம் என சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

விஸ்வநாதப்பேரி துணைமின், மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி உபமின், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி மற்றும் விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.