News May 6, 2024

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம்..!

image

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பத்ரி நாராயணன் 592 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி என்ற இலக்கை எட்டியுள்ளனர்.

Similar News

News July 5, 2025

தென்காசியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உதவும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 5, 2025

தென்காசியில் ஜூலை.7ல் சோலார் பேனல் சிறப்பு முகாம்

image

சோலார் பேனல்கள் நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, விண்ணப்பிக்கும் முறை,வங்கி கடன் உதவி, அரசின் மானியங்கள், சோலார் பேனல் மின் உற்பத்தியால் கிடைக்கும் பயன்கள் பற்றிய விரிவான தகவல்கள், தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற சோலார் பேனல் நிறுவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மின்வாரிய அலுவலர்கள் வழிகாட்டுதலில் ஜூலை 07 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறப்பு முகாம் தென்காசியில் நடக்கிறது

News July 5, 2025

புளியங்குடி மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை கைது

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே 42 வயது விவசாயி, தனது 17 வயது மகளை கர்ப்பமாக்கி உள்ளார். மகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படவே, மருத்துவ பரிசோதனையில் 7 மாத கர்ப்பம் தெரியவந்தது. தாய் வெளியே சென்றபோது, மது போதையில் தந்தை தவறாக நடந்ததாக மகள் தெரிவித்தார். இதையடுத்து, தாய் அளித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!