News May 7, 2025
தென்காசி மாவட்ட அணைகள் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 47 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடி. 4 கன அடி நீர் வருகிறது. 10 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி நீர் இருப்பு 24 அடி. நீர் வரத்து இல்லை குண்டாறு அணை நீர் இருப்பு 23 அடி. அடவிநாயனார் அணை நீர் இருப்பு 21 அடியாக உள்ளது.
Similar News
News January 29, 2026
தென்காசி: மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன்

திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (29) சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சங்கீதா (26) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சங்கீதாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. தப்பியோடிய சங்கிதா அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் ரகுவரனை கைது செய்தனர்.
News January 29, 2026
தென்காசி: 3 போலீசார் பணி இடை நீக்கம்

புளியங்குடியை சேர்ந்த முகமது கனி (71). இவரது மகள் ஆயிஷா சித்திக்கா (41) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றதாக புளியங்குடி போலீசார் விசாரனைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போது அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, போலீசார் மருது பாண்டியன், தேவி, ஏட்டு சிவா ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
News January 28, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (28-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.


