News November 22, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடையா? கால் பண்ணுங்க…

image

தென்காசி மாவட்ட மக்கள், மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், (TNPDCL OFFICIAL APP) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைதளங்கள், திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 மூலம் தகவல் தெரிவிக்கலாம்

Similar News

News January 31, 2026

தென்காசி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News January 31, 2026

தென்காசி அருகே கல்லூரி பேருந்து விபத்து!

image

ஆலங்குளம் பேருந்து நிலையம் முன், நேற்று சீதபற்பநல்லூர் தனியார் கல்லூரி பேருந்து மீது முத்துகிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேன் டிரைவர் மனோகர், 10 மாணவர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த மனோகர், மாணவர் விக்னேஷ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயமடைந்த மாணவர்கள் ஆலங்குளம் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரனை

News January 31, 2026

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் வசந்த் (30). சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு எதிர்பாராத விதமாக அவர் வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!