News December 20, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை எழுத்து தேர்வு

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335 மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,
Similar News
News January 2, 2026
தென்காசி: 12th தகுதி.. ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

தென்காசி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <
News January 2, 2026
தென்காசி: கார் மோதி சம்பவ இடத்தியிலே பலி

தென்காசி ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தை சேர்ந்தவர் அருள்ராம நவநீதகிருஷ்ணன் (63). இவர் நேற்று சாலையை கடக்க முயன்ற பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரக்கேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக நெல்லை டவுணை சேர்ந்த ஹரிஷ் மாதவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News January 2, 2026
தென்காசி மாவட்டத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.


