News August 11, 2025

தென்காசி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

image

தென்காசி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <>இங்கே க்ளிக் <<>> செய்யவும். இதை, கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

Similar News

News August 11, 2025

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

image

சிவகிரி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த துளசி(26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உடல்நிலை காரணமாக ஊருக்கு வந்தவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். சிவகிரி இன்ஸ்பெக்டர் முரளீதரன், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

News August 11, 2025

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர் முகாமில் 432 மனுக்கள்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் (11.08.2025) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், என மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டது.

News August 11, 2025

தென்காசியில் புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

image

தென்காசி மாவட்டத்தின் புதிய சார் ஆட்சியராக வைஷ்ணவி பால் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். 19 வருடங்களுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், விவசாயம் குறித்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!