News January 25, 2026
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று (ஜன.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
தென்காசி: அதிமுக வேட்பாளர்கள் இவர்களா?

தென்காசி, கடையநல்லுார், சங்கரன் கோவில், ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட முடிவு செய்ததாகவும் வாசுதேவநல்லுார் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு வழங்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாகவும் தகவல். அதன்படி, செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி MLA, EX.அமைச்சர் ராஜலட்சுமி, ராஜேந்திரன் or பிரபாகரனை வேட்பாளராக அறிவிக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 30, 2026
தென்காசி: வனவிலங்கு வேட்டை; இருவர் கைது!

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன இந்த நிலை வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் அவ்வப்போது வனப்பகுதியில் சென்று வேட்டையாடி வருகின்றன. அவர்களை வனத்துறையினர் கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று புளியரை பகுதியில் வேட்டையில் ஈடுப்பட்ட 2 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
News January 30, 2026
தென்காசி: கத்திரிக்கோலால் குத்தி கொண்டு தற்கொலை

வாசுதேவநல்லூர், சிந்தாமணிபேரி புதூரை சேர்ந்த முனீஸ்வரன் (39) தனியார் ஆலையில் தையல் தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு மனநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. முன்பு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தவர் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், (ஜன.31) மனைவி வெளியூர் சென்றபோது, வீட்டில் இருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். வாசுதேவநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


