News November 10, 2025
தென்காசி மக்களுக்கு ஹேப்பி நீயூஸ்

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் நவ.20 முதல் ஜன. 15 வரையும், கொல்லத்தில் இருந்து நான்டெட்டிற்கு நவ.22 முதல் ஜன.17 வரையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பதி வழியாக செல்கிறது. இதனால் தென்காசி மாவட்ட பொதுமக்கள் திருப்பதி செல்ல நேரடி ரெயில் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
தென்காசி: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
தென்காசி: காவலர் தேர்வில் காப்பி – 3 பேர் கைது

இலஞ்சியில் உள்ள தேர்வு மையத்தில் நேற்று நடந்த காவலர் தேர்வு எழுதிய சிவகிரியைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (23) என்பவர் செல்போன் மூலம் காப்பியடித்து தேர்வு எழுதிய போது பிடிபட்டார்.இதைத்தொடர்ந்து அவரும், அவருக்கு வெளியில் இருந்து பதில்களை அனுப்பி உதவியதாக சிவகிரியை சேர்ந்த பாண்டியராஜன், மல்லிகா(20) ஆகியோர் கைது செய்யபட்டனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
தென்காசி: பைக் கவிழ்ந்து ஒருவர் பலி

ஆலங்குளம் அருகே முத்து கிருஷ்ண பேரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி கூலித்தொழிலாளியான இவர் நேற்று ஞாயிறு இரவு பூலாங்குளம் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது வட்டாலூர் விலக்கு அருகில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


