News December 30, 2025
தென்காசி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு!

தென்காசி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <
Similar News
News December 31, 2025
தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 31, 2025
தென்காசி: புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல் கூடாது. மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இரவு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனித்திற்கு..

நாளை ஜன.,1 (2026) ஆம் தேதி முதல் வண்டி எண் 12661, சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் 8.10க்கு பதில் இரவு 7.35 மணிக்கு கிளம்பி செங்கோட்டைக்கு காலை 6.40 மணிக்கு வந்து சேரும். அதே போல் வண்டி எண் 12662, செங்கோட்டையில் இருந்து கிளம்பும் நேரமும் மாலை 6.50 மணியாக மாற்றப்பட்டுள்ளது.


