News June 14, 2024
தென்காசி போலீசாருக்கு குவியும் பாராட்டு

தென்காசி மாவட்ட போக்குவரத்து போலீசாரின் துரிதமாக செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இலத்தூர் விலக்கில் நேற்று நடந்த சாலை விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 மற்றும் 7 வயதுடைய 2 குழந்தைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.
Similar News
News March 1, 2026
தென்காசி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

தென்காசி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
தென்காசி: வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டி- VCK

சிவகிரியில் நேற்று அம்பேத்கர் முழு உருவச் சிலையை விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும். வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டியிடுவோம் எனவும், கூடுதல் தொகுதிகள் கேட்கப்போவதாகவும் கூறினார். மேலும் OPS வருகையால் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி வலுப்பெறும் எனவும், விஜய் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.
News March 1, 2026
கடையம் அருகே மளிகை கடை வியாபாரி தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (65). மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


