News November 10, 2025
தென்காசி: பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி அம்பேத்கர் 5ஆம் தெருவைச் சேர்ந்த வள்ளியம்மாள் (43) என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலத்தில் பயிர் செய்வது தொடர்பாக வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகியோருடன் தகராறு இருந்துள்ளது. காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.
Similar News
News November 10, 2025
தென்காசி: காவலர் தேர்வில் காப்பி – 3 பேர் கைது

இலஞ்சியில் உள்ள தேர்வு மையத்தில் நேற்று நடந்த காவலர் தேர்வு எழுதிய சிவகிரியைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (23) என்பவர் செல்போன் மூலம் காப்பியடித்து தேர்வு எழுதிய போது பிடிபட்டார்.இதைத்தொடர்ந்து அவரும், அவருக்கு வெளியில் இருந்து பதில்களை அனுப்பி உதவியதாக சிவகிரியை சேர்ந்த பாண்டியராஜன், மல்லிகா(20) ஆகியோர் கைது செய்யபட்டனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
தென்காசி: பைக் கவிழ்ந்து ஒருவர் பலி

ஆலங்குளம் அருகே முத்து கிருஷ்ண பேரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி கூலித்தொழிலாளியான இவர் நேற்று ஞாயிறு இரவு பூலாங்குளம் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது வட்டாலூர் விலக்கு அருகில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 10, 2025
தென்காசி மக்களை உடனே CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


