News December 27, 2025
தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 27, 2025
தென்காசி: ரூ.3 லட்சம் சம்பளம்; RBI வேலை

தென்காசி மக்களே; இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு ‘சி’ ஒப்பந்த அடிப்படையில் 77 காலியிடங்களுக்கு (ஐடி, வளாகம், மேற்பார்வை துறைகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஇ/பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட தகுதி மற்றும் அனுபவம் அவசியம். 21 – 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.3.10 – 6 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2026 வரை. விண்ணப்பிக்க <
News December 27, 2025
தென்காசி: இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி வகுப்பு

தென்காசி மாவட்டம், இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியில் ஊரக வேலை வாய்ப்பு மையத்தின் கீழ் கிராமப்புற இளைஞர் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுனர் பயிற்சி டிச.29ம் தேதி துவங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
News December 27, 2025
தென்காசி முக்கிய ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

தென்காசி நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை 28ஆம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்படுகிறது. இதனால் கூடுதல் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பதிவு நடக்கிறது.


