News December 18, 2025
தென்காசி: பெண்களுக்கு அரிய வாய்ப்பு

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை இலத்தூர் மெயின் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிச.22ம் தேதி முதல் தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பின்பு மத்திய அரசின் சான்றிதழ்களும் வழங்கப்படுவதால் கிராமப்புற பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE!
Similar News
News December 27, 2025
தென்காசி முக்கிய ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

தென்காசி நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை 28ஆம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்படுகிறது. இதனால் கூடுதல் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பதிவு நடக்கிறது.
News December 27, 2025
தென்காசி: 10th பாஸ்; ரயில்வே வேலை!

தென்காசி மக்களே; இந்திய ரயில்வே குரூப் ‘டி’ (நிலை–1) பணிக்கு 22,000 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ/தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் தகுதியுள்ள 18 -33 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க 21.01.2026 முதல் 20.02.2026 வரை கால அவகாசம் உள்ளது. மேலும் தகவலுக்கு <
News December 27, 2025
தென்காசி: மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சங்கரன்கோவில் பகுதிகளான மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் (டிச.29)
காலை 9 – மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும். *ஷேர்


