News January 8, 2026

தென்காசி: பூச்சி மருந்து குடித்து தற்கொலை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ் (45). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News February 13, 2026

காவல்துறை இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய(12/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 12, 2026

தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப் 13) நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..

News February 12, 2026

தென்காசி: இந்த முக்கிய எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.தென்காசி – 9445000383
2.சங்கரன்கோவில் – 9445000382
3.செங்கோட்டை- 9445000384
4.சிவகிரி- 9445000385
5.ஆலங்குளம்- 9445000390
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!