News October 12, 2025
தென்காசி: புளியங்குடி காய்கறி சந்தை நாளைக்கு லீவ்

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று புளியங்குடி காய்கறிச் சந்தை. ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத கடைசி திங்கட்கிழமை மாதாந்திர விடுமுறை விடப்படும். அந்த வகையில் நாளை(அக்.13) திங்கள்கிழமை மாதாந்திர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை புளியங்குடியில் காய்கறி சந்தை இயங்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 12, 2025
தென்காசி: தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பாதுகாப்பான தீபாவளி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் சாதிர் கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்ட அலுவலர் தீயணைப்பு மீட்பு பணிகள் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள், ஆராய்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News October 12, 2025
தென்காசி: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 12, 2025
தென்காசி: மனமகிழ் மன்றம் திறப்பதை எதிர்த்து போஸ்டர்

பாவூர்சத்திரம் மற்றும் கீழப்பாவூர் பகுதிகளுக்கு தொழிற்சாலைகளை கொண்டு வராமல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடங்களை கொண்டு வரும் திட்டத்தை கைவிடுங்கள். நான்கு வழிச்சாலையில் வரவிருக்கும் மதுக்கடையின் அனுமதியை ரத்து செய்து நிரந்தரமாக மூடுங்கள் எங்களை போராடத் தூண்டாதீர்கள் என்று சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் பாவூர்சத்திரம் நகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.