News January 16, 2026

தென்காசி: பட்டாசு தயாரித்தவர் கைது!

image

சிவகிரி அருகே எ.சுப்பிரமணியபுரத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த புதியராஜ் (42) என்பவர், கடந்த 10 நாள்களாக அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாராம். தகவலின்பேரில், புளியங்குடி போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, 240 கிலோ மேற்பட்ட வெடி தயார் செய்யும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து புதியராஜை கைது செய்தனர்.

Similar News

News January 26, 2026

தென்காசி : ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

தோரணமலை முருகன் தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகள் விபரம்

image

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். காலை 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறுகிறது. பக்தர்களின் பால்குட பவனி நடைபெற உள்ளது.

News January 26, 2026

தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். வாட்ஸ் ஆப்பில் ஆதார் வந்துவிடும் (குறிப்பு உங்க ஆதார் இணைக்கபட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து ‘HI’ அனுப்ப வேண்டும்.) இதை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!