News March 19, 2025

தென்காசி: நீண்ட கால துன்பம் நீங்கும் ஆலயம்

image

தென்காசி கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவரின் முழு அருளும் கிடைக்கும். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். SHARE IT

Similar News

News September 19, 2025

தென்காசி: பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் அறிவிப்பு

image

சங்கரன்கோவில் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகம் கட்டண கழிப்பிடம் மற்றும் வெளிப்புற ஏழு கடைகள் சிறப்பு நிபந்தனைக்கு உட்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளியை 1.10.2025 ஆம் தேதி புதன்கிழமை காலை 10:30 மணி வரை சமர்ப்பிக்கலாம் என சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

விஸ்வநாதப்பேரி துணைமின், மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி உபமின், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி மற்றும் விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

error: Content is protected !!