News March 20, 2026
தென்காசி: தொகுதிகளுக்கு தீவிர நேர்காணல்

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.
Similar News
News April 3, 2026
தென்காசி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 3, 2026
ஆலங்குளம் வேட்பாளரிடம் இவ்வளவு கிலோ தங்கமா?

ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு செய்துள்ள ஹரி நாடார் தன்னிடம் ரூ.17 கோடி மதிப்பிலான 11.650 கிலோ தங்க நகைகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவர் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ரூ.1.18 கோடி மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும், 24 கிரிமினல் வழக்குகள் உள்ளன என தகவல் தெரிவித்தார்.
News April 3, 2026
செங்கோட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக சிவசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் துண்டானது. இதனால் 3 சக்கர நாற்காலியில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி செங்கோட்டை GH-க்கு அனுப்பி வைத்தனர்.


