News January 1, 2025
தென்காசி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பரிசளிப்பு விழா

தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
Similar News
News November 5, 2025
தென்காசி: சிறையில் தற்கொலை செய்தவர் உடல் ஒப்படைப்பு

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 30. கூலி தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ஆம் தேதி சிறை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி 21 தினங்களுக்கு பின் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
தென்காசியில் கால அவகாசத்தை நீட்டித்து ஆட்சியர் உத்தரவு.!

தென்காசி மாவட்டத்தில், உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்ய அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க


