News February 5, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வள்ளியம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (24). கட்டட தொழிலாளியான இவர் திங்கட்கிழமை இரவு கடையநல்லூரில் இருந்து வள்ளியம்மாள்புரம் நோக்கி டூவீலரில் சென்றார். அச்சம்ப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த ஆம்னி வேன் இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 10, 2026
தென்காசியில் வேட்டையாடிய நபர் கைது

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை வருவாய் கிராமம், குற்றாலம் வனச்சரகம், மேக்கரை பிரிவு, மேக்கரை பீட் எல்லைக்குட்பட்ட அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரித்ததுள்ளனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடமானை வேட்டையாடி எரித்த வடகரையை சேர்ந்த சாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
News February 10, 2026
தென்காசியில் தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பயிற்சி

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
News February 9, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


