News February 17, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து மார்ச் 08-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

Similar News

News February 18, 2026

தென்காசி: வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

தென்காசி மாவட்ட வன அலுவலருக்கு ஆலங்குளம் பகுதியில் நாய்களுடன் சிலர் வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனச்சரக அலுவலர் சோதனை செய்ததில் காடுவெட்டி கிராமத்தில் 3 வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட ஜெயக்குமார், மால்மருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய 3 நாய்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு தலா ரூ.40,000 வீதம் அபதாரம் விதித்தனர்.

News February 18, 2026

சங்கரன்கோவிலில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமர் மல்லிகா பேகம் தம்பதியரின் மகன் அசாருதீன். கூலி தொழிலாளியான அசாருதீன் நேற்று இரவு அப்பகுதி உள்ள கிணற்றின் அருகே நடந்து செல்லும் போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலயறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

News February 18, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!