News September 13, 2025

தென்காசி: செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி

image

நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள்(80) என்பவர் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகார் வந்த நிலையில் புளியங்குடி காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிவர்ணம்(34) என்ற நபரை கைது செய்தனர். இவர் ME(C.S) படித்தவர் ஆவார்.

Similar News

News September 13, 2025

தென்காசி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

தென்காசி: “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு மேற்க்கொண்டார்.

News September 13, 2025

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவு

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் காரணமாக சீசன் குற்றாலம் பகுதிகளில் கலை கட்டியது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்தது.

error: Content is protected !!