News October 11, 2025
தென்காசி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய அளவு மழையின் தாக்கம் இல்லாததினால் காரணமாக அருவியின் நகரம் என போற்றப்படும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அருவியில் நீர்வரத்து குறைந்து வருவதால் விடுமுறை தினமான சனிக்கிழமை குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
Similar News
News April 11, 2026
ஆலங்குளத்தில் நடிகர் ராமராஜன் பிரசாரம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக விபின் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் ராமராஜன் இன்று தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் நடிகர் ராமராஜன் ரசிகர் மன்றத்தினர் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.
News April 11, 2026
தென்காசி: ஆலங்குளத்தில் 226 பேர் மீது வழக்குப்பதிவு

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்த பனைத்தொழிலாளி மணிகண்டன் மீது SI இசக்கிராஜா துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து நாதக வேட்பாளர் பால்ராஜ், MP ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 14 பெண்கள் உட்பட 226 பேர் மீது சட்டவிரோத கூடுகை, சாலை மறியல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
News April 11, 2026
தென்காசி: TVK நிர்வாகி காரில் பணம் பறிமுதல்

தமிழகத்தில் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடியில் வாகன சோதனை செய்த போது காரில் வந்த தவெக வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமாரிடம் ஆவணமின்றி இருந்த ரூ.1,37,500 பறிமுதல் செய்யப்பட்டு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


