News November 5, 2025

தென்காசி: சிறையில் தற்கொலை செய்தவர் உடல் ஒப்படைப்பு

image

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 30. கூலி தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ஆம் தேதி சிறை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி 21 தினங்களுக்கு பின் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

தென்காசி: இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் படுகாயம்

image

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாம்பவர்வடகரை- வேலாயுதபுரம் ரோட்டில், நேற்று இரவு நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் கடையநல்லூரை சேர்ந்த முத்தையாசாமி மகன் முப்புடாதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாம்பவர்வடகரை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 5, 2025

தென்காசி முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

image

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அ. ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News November 5, 2025

தென்காசி: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை.!

image

தென்காசி மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை<> கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி, மதுரையில் நவ.13 & 14 ல் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வேலை பெறலாம். இதற்கு சம்பளமாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!