News February 28, 2026

தென்காசி: சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி; 3 பேர் கைது

image

சங்கரன்கோவில் அருகில் மைப்பாறை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, தாமோதரன், ஐயப்பன் உள்ளிட்ட 3 பேர் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 1, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (28/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 28, 2026

தென்காசி: மார்ச் மாத மின்குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மின் குறைதீர்கூட்டம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 10ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 13-ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் 20 ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு தொடங்கும் என மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

தென்காசி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாத்தனுமா.?

image

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!