News February 26, 2026
தென்காசி : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News March 1, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (28/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News February 28, 2026
தென்காசி: மார்ச் மாத மின்குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மின் குறைதீர்கூட்டம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 10ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 13-ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் 20 ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு தொடங்கும் என மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
தென்காசி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாத்தனுமா.?

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.


