News April 3, 2024

தென்காசி: குண்டர் சட்டத்தில் ஐந்து பேர் கைது

image

தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவு படி புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்(23), தூத்துக்குடி முத்துகல்யாணி (22), சிந்தாமணிபேரிப்புதூர் கலைச்செல்வன்(19), தென்காசியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பீர் முகமது(52), புளியங்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் மணிகண்டன்(40) ஆகிய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News July 5, 2025

தென்காசியில் சேமிப்பு கிடங்குகள் திறப்பு

image

ஆலங்குளத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.517.8 இலட்சம் மதிப்பீட்டிலான ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினையும், பாவூர்சத்திரத்தில் ரூ.290 இலட்சம் மதிப்பீட்டிலான சேமிப்புக் கிடங்கினையும், சங்கரன்கோவிலில் ரூ.550 இலட்சம் மதிப்பீட்டிலான மூன்று சேமிப்புக் கிடங்குகளையும், அச்சன்புதூரில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலான துணை வேளாண் விரிவாக்க மையத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கபட்டது.

News July 4, 2025

தென்காசியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 8, 2025

தென்காசி கலை கல்லூரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (மே.08) அழைப்பு விடுத்துள்ளார் .

error: Content is protected !!