News May 1, 2024
தென்காசி: குடிநீர் சேவை கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தென்காசி: அரசு பள்ளியில் 30 லேப்டாப்கள் திருட்டு

கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஒரு அறையில் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாரிகள் அந்த அறையை திறந்த போது, அந்த அறையில் இருந்த ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு 30 லேப்டாப்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
News November 22, 2025
தென்காசியில் இருந்து பிரிந்த 12 ஊராட்சிகள் இதோ…

குருவிக்குளம் யூனியன் பகுதியில் இருந்த இருந்த 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியுடன் இணைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேர, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல், லெட்சுமியம்மாள்புரம், ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைந்துள்ளது.
News November 22, 2025
தென்காசி: கடன் வசதி பெற ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் ஆகியன வேளாண் உட்கட்டமைப்பு நிதி எனும் திட்டம் மூலம் கடன் வசதி பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தகவல் அளித்துள்ளார்.


