News December 26, 2025
தென்காசி: கழிவு நீரோடையில் சடலம் மீட்பு!

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் பிரபாகரன் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் உடலில் காயங்களுடன் நேற்று முன் தினம் இரவு இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த புளியங்குடி போலீஸார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 8, 2026
வாகனட் டிக்கியில் சென்றதை அடுத்து போலீஸ் எஸ் பி நடவடிக்கை

தென்காசி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி எஸ்.பி. கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், பேட்டை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜசேகர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
News February 8, 2026
குற்றாலத்தில் பிப்ரவரி 10, 11 மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை

பாஸ்போர்ட் சேவையை விரிவுபடுத்தி தொலைதூர பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையம் அருகே பிப்ரவரி 10, 11 தேதிகளில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை அளிக்கப்படுகிறதுபயன்படுத்திக் கொள்ள மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்
News February 8, 2026
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

பிப்ரவரி – 2026 க்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13.02.2026 அன்று தென்காசி to குத்துக்கல் வலசை செல்லும் வழியில், உள்ள எபினெசேர் டைல்ஸ், KFC பின்புறம் நடக்க உள்ளது. ஆகையால் தென்காசி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஆட்கள் தேர்வுசெய்ய உள்ளனர்.


