News August 7, 2025
தென்காசி கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்

தென்காசி, புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள்(52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்களை அங்கிருந்த கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 6, 2026
தென்காசி: பெண் தோழியை அழைத்து சென்றவரின் கார் எரிப்பு

கடையநல்லூர் அருகே, பள்ளித் தோழியை காரில் அழைத்துச் சென்ற நண்பரைத் தாக்கி, அவரது காரை எரித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவிழாவிற்கு வந்த சின்னத்துரை என்பவர் தனது தோழியுடன் காரில் சென்றதை ஒரு கும்பல் வழிமறித்து கண்டித்துள்ளது. வாக்குவாதம் முற்றவே, அவர் வந்த பொலிரோ காரைப் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 20 பேரை தேடி வருகின்றனர்.
News April 6, 2026
தென்காசி: சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. காமுகன் கைது

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு மீனாட்சிபுரம் சாலையில் தங்கதுரை என்ற நபருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரு குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டு காலமாக தங்கி பணியாற்றி வந்த நிலையில், அந்த குடும்பத்தின் 13 வயது சிறுமிக்கு தங்கதுரை பாலியல் தொல்லைஅளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பள்ளி ஆசிரியை மூலம் அளித்த புகாரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
News April 6, 2026
தென்காசி: சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. காமுகன் கைது

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு மீனாட்சிபுரம் சாலையில் தங்கதுரை என்ற நபருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரு குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டு காலமாக தங்கி பணியாற்றி வந்த நிலையில், அந்த குடும்பத்தின் 13 வயது சிறுமிக்கு தங்கதுரை பாலியல் தொல்லைஅளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பள்ளி ஆசிரியை மூலம் அளித்த புகாரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


