News December 21, 2024
தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம், விரல் ரேகை பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி அனைத்து கோப்புகளையும் சரிவர பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Similar News
News October 1, 2025
தென்காசி மக்களே ஆதார் சேவை கட்டணத்தில் மாற்றம்!

தென்காசி மக்களே, 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் இன்று முதல் மாற்றம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர்
News October 1, 2025
தென்காசி: திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பியுங்க

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இதில கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளர்.
News October 1, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.