News November 23, 2024
தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று(நவ.,22) மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி ஆய்வினை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தென்காசி எஸ்பி ஶ்ரீனிவாசன் உடனிருந்தார்.
Similar News
News January 30, 2026
தென்காசி: நாளைய மின்தடை பகுதிகள்

சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி தெற்கு & வடக்கு சத்திரம் வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, சொக்கநாதன் புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் வடுகப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகளம், வெள்ளாகளம், ஆவுடையார்புரம் & கண்டம்பட்டி நக்கலமுத்தன்பட்டி இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம் புளியங்குளம் அய்யனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் “SHARE
News January 30, 2026
தென்காசி: Whatsapp யூஸ் பண்றீங்களா? தெரிஞ்சுகோங்க!

உங்கள் வாட்ஸ் ஆப்-ல் தேவை இல்லாத நம்பர்களில் இருந்து அழைப்பு வருகிறதா?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 30, 2026
பண்பொழி திருமலை கோவிலில் நாளை தேரோட்டம்

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை குமாரசாமி கோவிலில் ஜனவரி 31ம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. சிறப்பு அலங்காரத்தில் திருமலை குமரன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க


