News December 19, 2025
தென்காசி: இலவச கார் ஓட்டுனர் பயிற்சி – APPLY!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஊரக வேலைவாய்ப்பு மையத்தின் கீழ் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. எனவே கிராமப்புறத்தை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் அலுவலகத்தை அணுகவும்.
Similar News
News December 20, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை எழுத்து தேர்வு

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335 மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,
News December 20, 2025
தென்காசி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் ராஜ நயினார் (28). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாப்பாகுடி இன்ஸ்பெக்டர் பரத் லிங்கம் வேண்டுகோளின் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி ராஜ நயினார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 20, 2025
தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <


