News December 21, 2025
தென்காசி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 20.12.2025 காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம்; பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
தென்காசி: ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் ஔவையார் விருது வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2025 ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
தென்காசி: தோட்டத்தில் பூச்சி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் இவர் விவசாயத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவாச குழாய் வழியாக மருந்து சென்று வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 23, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
தற்சமயம் நிர்வாகக் காரணங்களால் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தகவல்.


