News January 28, 2025
தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

இன்று 27.01.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News July 10, 2025
குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் மிகவும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். மேலும் வருடத்திற்கு ஒருமுறை குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வருடத்திற்கான சாரல் திருவிழா வருகின்ற ஜூலை 19ம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
தென்காசியில் ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

மாநில அளவில் 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்துடன், ஆவணங்களை https://tinyurl.com/Panchayataward தகுதியான ஊராட்சிகள் (or) https://cms.tn.gov.in/cms migrated/document/forms/Samooga Nallinakka Ooraatchi Award Application.pdf பதிவிறக்கலாம். *SHARE IT
News July 10, 2025
தென்காசியில் வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஜீலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 18ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. முகாமில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மறக்காம ஷேர் பண்ணுங்க