News March 26, 2024

தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 30, 2025

தென்காசியில் ஓசியில் சிகரெட் கேட்டு அடித்துக் கொலை

image

தென்காசி மாவட்டம் அடைச்சாணியைச் சேர்ந்த மாரிமுத்து (30), துப்பாக்குடி டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் அவரிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். தகராறு கைகலப்பாக மாறியதில், மூவரும் மதுபாட்டிலால் மாரிமுத்துவைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். காயமடைந்த பட்டுசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 29, 2025

தென்காசியில் குடைவரை கோவிலா.? எங்கு தெரியுமா?

image

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரத்தில் மலையை குடைந்து பசுபதிசுவரர் குடைவரை கோவில் உள்ளது .இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில் லிங்க வடிவத்தில் சிவன் காட்சியளிக்கிறார்.பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது .இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

நான்கு சக்கர வாகன வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!