News September 15, 2025

தென்காசி: ஆட்சியரின் போலி கையொப்பம் மூலம் மோசடி!

image

தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேரிடம் தலா 3 லட்சம் மோசடி செய்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரின் போலி கையொப்பமிட்டு ஆணை வழங்கிய விருதுநகரை சேர்ந்த நாகராஜந்திரகுமார் மற்றும் போலி ஆணை தயாரித்து வழங்கிய ரமேஷ் ஆகிய இருவரை கடையம் போலீசார் கைது செய்துள்ளனர். இது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க… இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 15, 2025

தென்காசியில் அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா

image

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.15) அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 10.30 நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

News September 15, 2025

தென்காசி: ஆற்றில் விழுந்த விவசாயி உயிரிழப்பு

image

தென்காசி, ஆலங்குளம் அருகே மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (61) விவசாயி. இவர் நேற்று குறிப்பன்குளம் சிற்றாற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் விவசாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!