News March 19, 2024

தென்காசி அருகே வெறி நாய்களின் தொல்லை 

image

தென்காசி, சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் நடமாடக் கூடிய நகர் பகுதி முழுவதும் வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் மக்களை தெருநாய் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News August 8, 2025

செங்கோட்டை சென்னை சுதந்திர தின சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே தென்காசி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News August 7, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News August 7, 2025

கரடி தாக்கி காயமடைந்த பெண்களுக்கு நிவாரண தொகை

image

புளியங்குடியில் கரடி தாக்கி காயம் அடைந்த மூன்று பெண்களையும் தென்காசி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணத் தொகை வழங்கினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

error: Content is protected !!