News March 19, 2024
தென்காசி அருகே வெறி நாய்களின் தொல்லை

தென்காசி, சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் நடமாடக் கூடிய நகர் பகுதி முழுவதும் வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் மக்களை தெருநாய் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News September 25, 2025
தென்காசியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

தென்காசி, கீழப்பாவூர் வட்டார கிராமிய வில்லிசை கலைஞர்களின் முன்னேற்ற சங்க தலைவரான மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் ஜெகநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மாவட்ட அளவில் கலை சுடர்மணி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News September 25, 2025
தென்காசி விஜய் சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி நவம்பர் 11ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய வருவதாக இருந்தது. அது தற்போது மாற்றி அமைக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருவதாக தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News September 25, 2025
தென்காசி: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

தென்காசி மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <