News April 25, 2024
தென்காசி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

தென்காசி அருகே உள்ள ரவண சமுத்திரம் மாலிக் நகரை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (60) இவர் நேற்று வீட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

தென்காசி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News July 5, 2025
வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தென்காசி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News July 5, 2025
தென்காசியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உதவும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!