News April 29, 2024

தென்காசி அருகே விபத்து; இருவர் மரணம்

image

சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது,சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குழியில் கவிழ்ந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News September 26, 2025

தென்காசி மக்களே இதை நம்பாதீங்க…!

image

தென்காசி மக்களே ஆடைகளுக்கு ₹2500-க்கு மேல் பில் செய்தால் 18% ஜிஎஸ்டி, அதற்குக் குறைவாக இருந்தால் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. துணிக்கடைகளில் ஒவ்வொரு ஆடைக்கும் அதன் விலையின் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி (GST) கணக்கிடப்படுகிறது. எனவே, பில்லைப் பிரித்து வாங்குவதால் ஜிஎஸ்டி குறையாது. உங்களுக்கு தெரிஞ்சுவங்க ஏமாறாமல் இருக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News September 26, 2025

தென்காசி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 26, 2025

தென்காசி: 2 சிறுவர்கள் மீது வழக்கு

image

தென்காசி கீழப்புலியூரில் வசிக்கும் 68 வயது அலிஷேக் மன்சூர், செப். 22 இரவு வாய்க்கால் பாலம் அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். தென்காசி போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்தியது ஒரு சிறுவன் என்பதும், அவனுக்கு வாகனம் கொடுத்தவர் அகமதுஷா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் மற்றும் அகமதுஷா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!