News May 29, 2024
தென்காசி அருகே ஐந்து பேர் கைது

கடையம் அருகே மேல குத்தபாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (55).இவர் வீட்டு அருகில் உள்ள கேட்டை புறம்போக்கு நிலம் எனக் கூறி மணிராஜ் (27), அவரது சகோதரர்கள் மாரிசெல்வம் (25), பிரசாத் பாபு (21),சிவா (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து கேட்டை உடைத்து ,அர்ஜுனனை கல்லால் தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Similar News
News September 10, 2025
தென்காசி: மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மாலை முதல் பெய்தது. இதன் காரணமாக தென்காசி வட்டார சுற்று பகுதிகளில் மழை பெய்த நிலையில் (செப்டம்பர் 9) நேற்று சங்கரன்கோவில் – குருவிகுளம் செல்லும் சாலையில் மின்னல் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
தீபாவளி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 10.10.2025 வரை (https//www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (09.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.