News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 5, 2026
தென்காசி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.2026 அன்று மஞ்சம்மாள் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் முற்பகல் 243 தேர்வர்களும் பிற்பகல் 244 தேர்வர்களும் எழுதவுள்ளனர். தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மற்றும் மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறும்.
News February 5, 2026
தென்காசியில் சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இன்று யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பழமையான புளியமரம் முறிந்து விழுந்தது. இதில் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்த தங்கராஜ் என்பவரின் ஆட்டோ சேதமடைந்தது. போக்குவரத்து மிகுந்த அந்த பகுதியில் அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
News February 5, 2026
தென்காசி மாவட்ட இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (04/01/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


